Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி:உலக சாதனைக்காக ஒரு மணி நேரம் இடைவிடாது ஸ்கேட்டிக் போட்டி இந்தியா முழுவதும் மே,12-ந்தேதி முதல் மே,15-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கேட்ஸ் இந்தியன் மன்றம் சார்பில் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற இப்போட்டியை காணொளி காட்சி மூலம்ஹரியானா ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலாளர் பவன்அகர்வால் தொடங்கி வைத்தார்.
100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதில்,40 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு சாதனை படைத்தமைக்கான சான்றிதழ்,பரிசுகள் வழங்க ஏற்பாடுகளை பயிற்சியாளர் கணேஷ்,ராம்ராஜ் செய்திருந்தனர்.